தமிழ் ஆங்கிலப் பக்கங்கள்

சனி, 12 செப்டம்பர், 2009

கற்பித்தது தமிழ், பெற்றது இன்பம்.


கொஞ்ச நாட்களுக்கு முன் தொலைக்காட்சியில் "கற்றது தமிழ்" படம் பார்த்தேன். எல்லோருக்கும் படிப்பும் தொழிலும் மனதுக்கு பிடித்தமானதாக அமைந்து விடாது. இந்தப் படத்தின் கதாநாயகனுக்கு விருப்பமான படிப்பு அமைந்தாலும், அவனுடைய தொழில், வாழ்க்கையின் வசதிகளைக் கொடுக்கவில்லை. இது தமிழ் மட்டுமல்லாது, தொழில் சார்பில்லாத கல்வி பயின்று கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் பலரும் இக் கஷ்டத்தை அனுபவிக்கின்றனர்.

அண்மையில் படித்த ஓரு செய்தி மிகுந்த சந்தோசத்தைக் கொடுத்தது. நாமக்கல், குருசாமிபாளையம் தமிழ் ஆசிரியர் எஸ். வி.வெங்கட்ராமன் அவர்களுக்கு, ஆசிரியர் தினத்தன்று, அவரது முன்னாள் மாணவர்கள், ஓரு வீட்டைப் பரிசாகக் கொடுத்துள்ளனர்.

திங்கள், 13 ஜூலை, 2009

இளமையாக இருக்க சில எளிய முறைகள்

ஓண்ணா, இரண்டா? எதை சொல்ல, எதை விட?

பயப்பட வேண்டாம். தங்க பஸ்பம் சாப்பிடறது, ஆட்டுப் பால் குடிக்கறதுன்னு நான் கடி போட மாட்டேன். அதை விட சுலபமான வழி எங்கிட்ட இருக்கு. இலவசமாவே சொல்லித் தரேன். தமிழில் வலைப் பதிவு எழுதறதுதான் அந்த எளிமையான வழி. இதென்னாது, மொட்டத்தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடற கதையா இருக்கேன்னு சண்டைக்கு வராதீங்க. மேலே படியுங்க. நிச்சயமா ஏமாத்த மாட்டேன்

வலைப் பதிவு எழுதும் போது, அட நாம கூட ஏதோ புதுசா செய்யறமோன்னு ஓரு சின்ன திருப்தி




சனி, 11 ஜூலை, 2009

விருப்பமில்லாத திருப்பங்கள்


சமீபத்தில் பேப்பரில் ஒரு விபத்து பற்றி படித்தேன். இதைப் படித்தபோது, சுஜாதாவின் "விருப்பமில்லாத திருப்பங்கள்" நாவல் நினைவுக்கு வந்தது. இதன் கதாநாயகன், ஏழையாக இருந்தாலும், மிகவும் தன்னம்பிக்கையானவன். எதையாவது முயற்சி செய்து கொண்டேயிருப்பான். எதிர்காலத்தைப் பற்றி மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பான். சில விருப்பமில்லாத திருப்பங்களால், கையை இழந்து, மிகவும் முயற்சித்த வேலை வாய்ப்பும் கை நழுவிப் போகும். திரும்பவும் அவனது முயற்சிகளைப் பற்றிய கதை இது.

வியாழன், 2 ஜூலை, 2009

அரசன் அன்றே கொல்வான், தெய்வம் நின்று கொல்லும், நீதி என்று வெல்லும்?

ஓரு சிலர் போன வாரத்தில் ஓரு அமெரிக்க புள்ளியைப் பற்றி படித்து இருப்பீர்கள். நான் கூறுவது பெர்னார்ட் மேடாஃப்(Bernard Madoff) பற்றி. இதற்கும் தலைப்புக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா? கொஞ்சம் பொறுங்கள்!


முதலில் செய்தி: ஜுன் 29, 2009: மேடாஃப் (Madoff) 150 வருட சிறை தண்டணை விதிக்கப் பெற்றார். சரி இப்போ இவரோட கதையை பார்க்கலாம். நம்ம ஊருல, வங்கிகள் 8% வட்டி கொடுக்கும் போது தனியார் நிதி நிறுவன்ங்கள் 20%,40% விளம்பரம் பண்ணுனப்போ, நம்ம மக்கள், பணத்தைக் கொண்டு போய் கொட்டி அசலே இல்லாம ஏமாந்ததை கொஞ்சம் ஃப்ளாஸ்பேக் (flashback) கில் யோசிச்சுப் பாருங்க. இந்தக் கதையும் ஓரளவுக்கு அது மாதிரிதான்.

வியாழன், 25 ஜூன், 2009

கூகுளுக்கு (Google) ஓ போடுவோம்.

போன மாசம் மே 22ந் தேதி, டெல்லியில் CBSE 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்து இருக்கு. நம்ம தம்பி சித்தாந் சிங்(18 வயசு), எதிர்பார்த்த மார்க்கைவிட கம்மியா வாங்கியிருக்கிறார். வீட்டுல கோபிச்சுக்குவாங்கன்னு பயந்து போய், வீட்டை விட்டு காணம போய்ட்டாரு. ஒரு மாசம தேடியும், எங்கியும் கிடக்கலை. ஒரு நல்ல நாள்ல, சித்தாந் அவரோட நண்பரோட ஆர்குட்(Orkut) அக்கவுண்டுல scarp போட்டுயிருக்காரு. (ஆர்குட் கூகுளை சார்ந்தது).

அந்த நண்பர் போலிஸ்கிட்ட இதை சொல்ல, போலிஸ், கூகுள்கிட்டயிருந்து, எந்த ஐ.பீ (IP - Internet Protocol address) ல் இருந்து சித்தாந் scarp போட்டு இருக்காருன்னு தகவல் வாங்கியிருக்கு. இத வச்சு, சித்தாந், பரிதாபாத் (Faridabad) ஊருல்ல இருக்கற ஒரு browsing centreல்ல இருந்து இதை அனுப்பியிருக்காருன்னு கண்டு பிடிச்சு, அங்கே விசாரிச்சாங்க. நம்ம தம்பி சித்தாந், அங்கன ஒரு டீக்கடையில் வேலை பார்த்துக் கொண்டிருக்காரு. பிறகு என்ன? பிரிந்தவர் கூடினால் சுபம்தான். உதவி செய்த கூகுளுக்கு நம் மனமார்ந்த நன்றிகள்.

வெள்ளி, 19 ஜூன், 2009

வேலூர் பொற்கோயிலும் மற்ற கற்கோயில்களும்

கோயில் என்றவுடன் எனக்கு எங்கள் ஊரில் இருக்கும் முனீஸ்வரன் கோயில் நினைவுக்கு வருகிறது. அழகான திருமணிமுத்தாற்றின் கரையில் ஐந்து ஏக்கர் பரப்பில் ஈஸ்வரன், அம்மன், கருப்பண்ண சாமி சன்னதிகளை உடைய எளிமையான கோயில் இது. ஈஸ்வரன் சன்னதிக்கு மேலே கூரை எதுவும் இல்லை. சாமி கூரை எதுவும் போடக் கூடாது என்று கூறியதாக மக்களின் நம்பிக்கை. சில பூச் செடிகள், மரங்கள், கிணறு முதலியவையும் உள்ளது. சாமி கும்பிடுவது முதல் வேலை. அடுத்த ஈர்ப்பு அங்கு வைத்துக் கொள்ளும் சந்தனம். சந்தனம் அரைக்கும் மேடையும் அதன் மேல் உள்ள சந்தனக் கட்டையும் கோவிலுக்கு எங்களை ஈர்க்கும் காந்தமாகும்.

வெள்ளி, 5 ஜூன், 2009

பூனைகள் - எனது இனிய நினைவுகள்

பூனை, நாய், ஆடு முதலியவற்றை செல்லப் பிராணிகளாகப் பெற்ற அதிர்ஷடசாலி நான். கிராமத்தில் பொதுவாக எல்லா வீடுகளிலும் பூனை வளர்ப்பார்கள். இதன் முக்கிய நோக்கம் பூனை மேலுல்ல அன்பு அல்ல. பூனையவிட்டு எலி பிடிப்பது ஆகும். பெண் பூனைகள் ரெகுலராக குட்டி போட்டு விடும். குட்டிகளுக்கு புதிய சொந்தக்காரர்களை கண்டு பிடுப்பது கொஞ்சம் கடினமான வேலை. இதனாலெயே பெண் பூனகளை அதிகம் வைத்திருக்க மாட்டார்கள். எங்க பாட்டி கொஞ்சம் வித்தியாசமானவர். ஆண் பூனை வீட்டில் அதிகம் இருக்காது, காணமல் போய் விடும் என்பதால் பெண் பூனைகளையே வளர்ப்பார்.

ஞாயிறு, 31 மே, 2009

என்ன பெயர் வைப்பது

உலகத்துல நெறய பேருக்கு அவங்களோட பெயர் பிறரால் (பெற்றோர் மற்றும் உறவினர்) சூட்டப்படுகிறது. நான் இயற்பெயரைச் சொல்றேன். மத்தவங்க வைச்ச பட்டப் பேரை இல்ல. நெறய பேருக்கு அவங்க பெயர் பிடிச்சிருக்கும். கொஞ்ச பேருக்கு அது பிடிச்சிருக்காது. ஓரு சிலர் அதைப் பற்றி யோசிக்க மாட்டங்க. சின்ன வயசில, என்னோட பேரை மாத்த ஆசைப்பட்டதுண்டு. நல்ல பேருதான். இன்னும் கொஞ்சம் சின்னதா இருக்கணும்னு பேராசைப் பட்டேன்!. என்னோட இடுகைக்கு பேரை யோசிக்கும் போதுதான், பேர் வைக்கறது எவ்வளவு கஷ்டம்னு மரமண்டைக்குப் பட்டது.