பூனை, நாய், ஆடு முதலியவற்றை செல்லப் பிராணிகளாகப் பெற்ற அதிர்ஷடசாலி நான். கிராமத்தில் பொதுவாக எல்லா வீடுகளிலும் பூனை வளர்ப்பார்கள். இதன் முக்கிய நோக்கம் பூனை மேலுல்ல அன்பு அல்ல. பூனையவிட்டு எலி பிடிப்பது ஆகும். பெண் பூனைகள் ரெகுலராக குட்டி போட்டு விடும். குட்டிகளுக்கு புதிய சொந்தக்காரர்களை கண்டு பிடுப்பது கொஞ்சம் கடினமான வேலை. இதனாலெயே பெண் பூனகளை அதிகம் வைத்திருக்க மாட்டார்கள். எங்க பாட்டி கொஞ்சம் வித்தியாசமானவர். ஆண் பூனை வீட்டில் அதிகம் இருக்காது, காணமல் போய் விடும் என்பதால் பெண் பூனைகளையே வளர்ப்பார்.