தமிழ் ஆங்கிலப் பக்கங்கள்

செய்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செய்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 12 செப்டம்பர், 2009

கற்பித்தது தமிழ், பெற்றது இன்பம்.


கொஞ்ச நாட்களுக்கு முன் தொலைக்காட்சியில் "கற்றது தமிழ்" படம் பார்த்தேன். எல்லோருக்கும் படிப்பும் தொழிலும் மனதுக்கு பிடித்தமானதாக அமைந்து விடாது. இந்தப் படத்தின் கதாநாயகனுக்கு விருப்பமான படிப்பு அமைந்தாலும், அவனுடைய தொழில், வாழ்க்கையின் வசதிகளைக் கொடுக்கவில்லை. இது தமிழ் மட்டுமல்லாது, தொழில் சார்பில்லாத கல்வி பயின்று கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் பலரும் இக் கஷ்டத்தை அனுபவிக்கின்றனர்.

அண்மையில் படித்த ஓரு செய்தி மிகுந்த சந்தோசத்தைக் கொடுத்தது. நாமக்கல், குருசாமிபாளையம் தமிழ் ஆசிரியர் எஸ். வி.வெங்கட்ராமன் அவர்களுக்கு, ஆசிரியர் தினத்தன்று, அவரது முன்னாள் மாணவர்கள், ஓரு வீட்டைப் பரிசாகக் கொடுத்துள்ளனர்.

சனி, 11 ஜூலை, 2009

விருப்பமில்லாத திருப்பங்கள்


சமீபத்தில் பேப்பரில் ஒரு விபத்து பற்றி படித்தேன். இதைப் படித்தபோது, சுஜாதாவின் "விருப்பமில்லாத திருப்பங்கள்" நாவல் நினைவுக்கு வந்தது. இதன் கதாநாயகன், ஏழையாக இருந்தாலும், மிகவும் தன்னம்பிக்கையானவன். எதையாவது முயற்சி செய்து கொண்டேயிருப்பான். எதிர்காலத்தைப் பற்றி மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பான். சில விருப்பமில்லாத திருப்பங்களால், கையை இழந்து, மிகவும் முயற்சித்த வேலை வாய்ப்பும் கை நழுவிப் போகும். திரும்பவும் அவனது முயற்சிகளைப் பற்றிய கதை இது.

வியாழன், 2 ஜூலை, 2009

அரசன் அன்றே கொல்வான், தெய்வம் நின்று கொல்லும், நீதி என்று வெல்லும்?

ஓரு சிலர் போன வாரத்தில் ஓரு அமெரிக்க புள்ளியைப் பற்றி படித்து இருப்பீர்கள். நான் கூறுவது பெர்னார்ட் மேடாஃப்(Bernard Madoff) பற்றி. இதற்கும் தலைப்புக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா? கொஞ்சம் பொறுங்கள்!


முதலில் செய்தி: ஜுன் 29, 2009: மேடாஃப் (Madoff) 150 வருட சிறை தண்டணை விதிக்கப் பெற்றார். சரி இப்போ இவரோட கதையை பார்க்கலாம். நம்ம ஊருல, வங்கிகள் 8% வட்டி கொடுக்கும் போது தனியார் நிதி நிறுவன்ங்கள் 20%,40% விளம்பரம் பண்ணுனப்போ, நம்ம மக்கள், பணத்தைக் கொண்டு போய் கொட்டி அசலே இல்லாம ஏமாந்ததை கொஞ்சம் ஃப்ளாஸ்பேக் (flashback) கில் யோசிச்சுப் பாருங்க. இந்தக் கதையும் ஓரளவுக்கு அது மாதிரிதான்.

வியாழன், 25 ஜூன், 2009

கூகுளுக்கு (Google) ஓ போடுவோம்.

போன மாசம் மே 22ந் தேதி, டெல்லியில் CBSE 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்து இருக்கு. நம்ம தம்பி சித்தாந் சிங்(18 வயசு), எதிர்பார்த்த மார்க்கைவிட கம்மியா வாங்கியிருக்கிறார். வீட்டுல கோபிச்சுக்குவாங்கன்னு பயந்து போய், வீட்டை விட்டு காணம போய்ட்டாரு. ஒரு மாசம தேடியும், எங்கியும் கிடக்கலை. ஒரு நல்ல நாள்ல, சித்தாந் அவரோட நண்பரோட ஆர்குட்(Orkut) அக்கவுண்டுல scarp போட்டுயிருக்காரு. (ஆர்குட் கூகுளை சார்ந்தது).

அந்த நண்பர் போலிஸ்கிட்ட இதை சொல்ல, போலிஸ், கூகுள்கிட்டயிருந்து, எந்த ஐ.பீ (IP - Internet Protocol address) ல் இருந்து சித்தாந் scarp போட்டு இருக்காருன்னு தகவல் வாங்கியிருக்கு. இத வச்சு, சித்தாந், பரிதாபாத் (Faridabad) ஊருல்ல இருக்கற ஒரு browsing centreல்ல இருந்து இதை அனுப்பியிருக்காருன்னு கண்டு பிடிச்சு, அங்கே விசாரிச்சாங்க. நம்ம தம்பி சித்தாந், அங்கன ஒரு டீக்கடையில் வேலை பார்த்துக் கொண்டிருக்காரு. பிறகு என்ன? பிரிந்தவர் கூடினால் சுபம்தான். உதவி செய்த கூகுளுக்கு நம் மனமார்ந்த நன்றிகள்.