தமிழ் ஆங்கிலப் பக்கங்கள்

சனி, 12 செப்டம்பர், 2009

கற்பித்தது தமிழ், பெற்றது இன்பம்.


கொஞ்ச நாட்களுக்கு முன் தொலைக்காட்சியில் "கற்றது தமிழ்" படம் பார்த்தேன். எல்லோருக்கும் படிப்பும் தொழிலும் மனதுக்கு பிடித்தமானதாக அமைந்து விடாது. இந்தப் படத்தின் கதாநாயகனுக்கு விருப்பமான படிப்பு அமைந்தாலும், அவனுடைய தொழில், வாழ்க்கையின் வசதிகளைக் கொடுக்கவில்லை. இது தமிழ் மட்டுமல்லாது, தொழில் சார்பில்லாத கல்வி பயின்று கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் பலரும் இக் கஷ்டத்தை அனுபவிக்கின்றனர்.

அண்மையில் படித்த ஓரு செய்தி மிகுந்த சந்தோசத்தைக் கொடுத்தது. நாமக்கல், குருசாமிபாளையம் தமிழ் ஆசிரியர் எஸ். வி.வெங்கட்ராமன் அவர்களுக்கு, ஆசிரியர் தினத்தன்று, அவரது முன்னாள் மாணவர்கள், ஓரு வீட்டைப் பரிசாகக் கொடுத்துள்ளனர்.