தமிழ் ஆங்கிலப் பக்கங்கள்

செவ்வாய், 26 மார்ச், 2024

சிற்பத்தில் அசைவுகள் - 1

குரங்குகள் குட்டிக்கரணம் அடிப்பது சதாரணம். குரங்குகள் குட்டிக்கரணம் அடிப்பதை கற்சிற்பமாக வடிப்பது அசாதரணமே!

சில சமயங்களில் கோயில்களில் மிக வினோதமான சிற்பங்கள் கண்ணில் படுவதுண்டு. பல நூறு ஆண்டுகளுக்கு முன் அவற்றை உருவாக்கிய சிற்பியின் குறும்புத்தனமும், படைப்பாற்றலும் அதன் மூலம் அவர் நமக்கு விடும் சவால்களும் வியப்பானவை.

அப்படிப்பட்ட சில சிற்பங்களை நான் பெங்களூரில் உள்ள அல்சூர் ஸ்ரீ சோமேஸ்வரர் ஆலயத்தில் பார்த்தேன். அவை எனது மூளைக்கு நிறைய வேலை கொடுத்தன.















கோயில் மண்டபத்தின் ஒரு தூணின் மேல் பகுதியில் இந்தச் சிற்பத்தை புரிந்து கொள்ள கடினமாக இருந்தது. அதைப் புகைப்படம் எடுத்து பெரிதுபடுத்திப் பார்த்தேன்.

செவ்வாய், 6 பிப்ரவரி, 2024

கரிகால் சோழனின் கல்லணையத் தேடி - 2

முதல் பதிவில் , கல்லணை பிரிட்டஷரால் மாற்றப்பட்டு இப்போது அதன் அடிப்பாகம் மட்டுமே நீருக்கடியில் உள்ளது எனப் பார்த்தோம். இந்தப் பதிவில் கல்லணை மற்றும் காவிரி டெல்டா பகுதியில் செய்யப் பட்ட மாற்றங்களையும் அதன் காரணங்கள் பற்றியும் பகிர்ந்துள்ளேன்.

மாற்றம் ஒன்றே மாறாதது; இது ஆறுகளுக்கு அதிகம் பொருந்தும். ஓடும் ஆற்றில், இந்த நிமிடத்தில் ஒரு இடத்தில் இருக்கும் நீர் அடுத்த நிமிடத்தில் போய்விட்டிருக்கும். புதிய நீர் அதன் இடத்தை நிரப்பும்.

ஒவ்வொரு கால கட்டத்திலும் மாறுதல்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

பண்டைய காலத்தில் ஆறுகள் வெள்ள நீரை எடுத்து செல்லும் வாகனங்களாகப் பயன்பட்டன. ஏரிகள் ஆற்றின் நீரைச் சேமித்து வைக்கும் பெரிய நீர்த்தேக்கங்கள் ஆகச் செயல்பட்டன.

பின்னர் பிரிட்டிஷ் காலங்களில், ஆறுகளின் குறுக்கே பெரிய தடுப்பணைகள் மற்றும் பெரிய நீர்த்தேக்கங்கள் அமைக்கும் முறைகள் தொடங்கி வலுப்பெற்றன. பின்னர் தொழிற்புரட்சி மாற்றங்கள், தற்போதைய 21ம் நூற்றாண்டு தொழில்நுட்ப புரட்சிக்கானது.

ஒவ்வொரு தலைமுறை செயல்பாடுகளிலும் சாதக பாதகங்கள் உள்ளன. இருந்தாலும், எங்கும் தேங்கிவிடாமல் ஆற்றைப் போல தொடருவதே வாழ்க்கையின் இயல்பு.

தென்னிந்தியாவில், ஸர் ஆர்தர் தாமஸ் காட்டன்(Sir Arthur Thomas Cotton), என்ற பிரிட்டிஷ் மிலிடரி பொறியாளர், காவிரி டெல்டா பகுதியில் நீர்ப்பாசன மாறுதல்களை ஆரம்பித்து பின்னர் கோதாவரி, கிருஷ்ணா டெல்டா பகுதிகளுக்கும் எடுத்துச் சென்றார். இது போலவே வட இந்தியாவிலும் ஸர் ப்ரோபி தாமஸ் காட்லி (Sir Proby Thomas Cautley) என்பவர் யமுனை மற்றும் கங்கை நதிகளில் இது போன்ற திட்டங்களை ஆரம்பித்து வைத்தார்.

ஆர்தர் காட்டனுக்கு முந்தைய தஞ்சாவூர் காவிரி டெல்டா பகுதிகள் எப்படி இருந்தன?