1. அறிமுகம்
புத்தரைப் பற்றி எனக்குத் தெரிந்தது
மிகக் குறைவானதே. பௌத்த மதம் என்றாலே புத்தர் மட்டும்தான் மற்றும்
அதன் முக்கியமான அம்சம் தியானம் என்பதே என் புரிதலாக இருந்தது.
எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் பயணக் கட்டுரைகளைப் படிக்கும் போது, போதிசத்துவர், அவலோகிதேஷ்வரர்
மற்றும் பல புதிய பெயர்கள் வந்தன. அவை பற்றி இணையத்தில் தேடும்
போது, இன்னும் அதிக கேள்விகளே எழுந்தன.
இந்து மரபில் பல தெய்வங்களின் வழிபாடு இருப்பது போல, பௌத்தத்திலும் நிறைய ஆண், பெண் தெய்வங்கள், யக்ஷர்கள், யக்ஷிகள், கணங்கள், மிதுனர்கள், வித்யாதரர்கள் இருக்கின்றனர் எனத் தெரிந்து கொண்டபோது
அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது.
எங்கள் அஜந்தா எல்லோரா பயணம் பற்றி, ஆலயக்கலை ஆசிரியர் ஜெயகுமார் நடத்திய இணைய வழி அறிமுக வகுப்பு, பௌத்த மதத்தைப் பற்றிய வரலாறு, பண்பாடு மற்றும் நிறைய புரிதல்களைக் கொடுத்தது.